Thursday, January 19, 2006

சிறு பிரிவே என்றாலும்...!




பிரிவுகள் ஓர்
சிறுபொழுதே ஆனாலும்
சினேகத்திற்குரியவர் என்றால்
நரகம்தான் நம்
அருகில் கிடைக்கும்!

கண்ணீர்
எட்டிப் பார்க்கும்!
கை விரலோ
துடைக்க மறுக்கும்!
இதயம் துடிக்க
மறக்கும்!

இது நேசத்திற்கான
நெஞ்சம்!
நீ இல்லாத பொழுதுகளோ
நேசத்திற்கு பஞ்சம்!

தோள் சாய்ந்து
அழுகை,
மடி சாய்ந்து
உறக்கம்,
இதமான வார்த்தைகள்,
இவற்றுக்கு நான்
எங்கே போவது? - நீ
இல்லாத தருணங்களில்!

0 நட்புகளின் பதில்கள்: