Saturday, December 16, 2006

இணையம் இணைக்கிறது இதயங்களை!



இணையத்தால்
இணைந்தனவோ
நம் இதயங்கள்
இரண்டும்!

கணினித் திரையினில்
உன் கண்களைத்தான்
பார்க்கிறேன் நான்!

மின்னஞ்சல் வரிகள்
எல்லாம் நம்
நெஞ்சங்களின் வண்ணங்களே!

காலையில் எழுவதற்கு
அலாரம் எதற்கு?
உறங்கினால்தானே நான்!

நீதான் மெசஞ்சரில்
பிங்க் செய்கிறாயே!
நீ வந்தபின்புதானே
எனக்கு பொழுது புலர்ந்தெதென்பது
புலனாகிறது!



நிஜமான உலகில்
நீண்ட இடைவெளிதான்
நமக்குள்!

சைபர் ஸ்பேசில்மட்டும்
சந்தித்துக் கொள்கிறோம்!
நித்தமும்
சப்தமிடாத
முத்தங்களுடன்!