Tuesday, June 13, 2006

ஏனிந்தப் பிரிவு?


எனக்கும் உனக்கும்
ஏன்
இத்தனை நாள்
ஓர் பிரிவு?


தொலைவில் இருந்தாலும்
நினைவில்
தொடர்ந்தே இருந்தோமே!

எனக்கும் உனக்கும்
ஏன்
இத்தனை நாள்
ஓர் பிரிவு?

பணிகள் சுமையெனினும்
விழிகளில் நினைத்தோமே!

எனக்கும் உனக்கும்
ஏன்
இத்தனை நாள்
ஓர் பிரிவு?

என்ன ஒரு
பணிச்சுமையோ!
ஒரு மடல் கூடச்
செய்யாமல்
இத்தனை நாள்
என்ன செய்தேன்?

எனக்கும் உனக்கும்
ஏன்
இத்தனை நாள்
ஓர் பிரிவு?