Sunday, August 06, 2006

உறவு!

எல்லோரும் இருந்தும்
ஏதோ நான்
தனியே இருக்கிறேன்.

என் உள்ளத்தில்
இப்போது
வெற்றிடம்
நிரம்பி வழிகிறது!

என் தேடல்
ஒரு தவமாயிருக்கிறது!
வரம் என்று
கிடைக்கும்?

பொல்லா வினையா?
பாவத்தின் பலனா?
விதியின் சதியா?
என்னவென்று
தெரியவில்லை!

எனக்கே
எனக்கென்று
எப்போது
வருவாய் நீ?
என் தோளில்
சாய்ந்து கொள்ள..!

காதலா? ..நட்பா..?


காதலா? நட்பா? என்று
ஒவ்வொரு முறையும்
கலந்தாய்வு நடக்கிறது
நம்முள்!

காதல் என்கிறேன்
நான்!
நட்பு என்கிறாய்
நீ!

பெயர்தான் வேறு!
உணர்வுகள் ஒன்றுதான்!
புரிந்துகொள்கிறோம்
இறுதியில்!