Monday, February 13, 2006

உன்னைப் பிடிக்கும் எப்போதும்

உன்னை
வம்புக்கிழுத்தே
வாய் திறக்க
வைக்கிறேன்!

நீ சண்டையிடும்போதும்
எனக்கு உன்னை
பிடித்திருக்கிறது!
மௌனமாய் இருக்கும்
தருணங்கள் போலவே!

Sunday, February 12, 2006

மௌனம் ஏன்?

சந்தித்தும் பேசாத
மௌனம் ஏன் தோழி?

மௌனம் ஓர்
முள் படுக்கை
என்று தெரியுமா
உனக்கு?

என்ன தவறு
செய்தேனென்று
இத்தகைய தண்டனை?

மௌனத்தைக்
கலைத்து
ஓர்
வார்த்தை சொல்
போதும் எனக்கு!
"இறந்து விடு" என்று!