Monday, September 29, 2008

சிநேகிதியே..!


உன் ரசனைகளின்

விவரிப்பில் என்னை

உன் ரசிகனாக்குகிறாய்!


விழிகள் விரித்து

ஒவ்வொன்றாய்

நீ வியந்து கூறும்

விஷயங்கள் ஒவ்வொன்றும்

முன்னெப்போதும் இல்லாமல்

அழகாய்த் தோன்றுகின்றன

எனக்கு!


வண்ணத்துப் பூச்சியொன்றை

பிடித்து உன்

கைகளில் கொடுத்தேன்!

வின் விரல்களில்

கண்டபிறகுதான்

வண்ணத்துப் பூச்சியின்

அழகு

எனக்குப் புரிகிறது!


உன் முகம்

சிவக்கும்போதெல்லாம்

ரோஜாக்கள்

தலை தாழ்த்திக்

கொள்கின்றன!

உன் வெட்கம்

பார்த்து

அவைகளுக்கும்

வெட்கமாம்!


ரோஜா இதழ்களை

வருடிப் பார்க்கிறாய்

உன் இதழ்களால்!

எது மென்மையென்று

கண்டுகொள்ள

எனக்கும் ஆசைதானடி!


நீ

பொய்க்கோபம் கொண்டாடும்

தருணங்களைக்

காண வேண்டியே

இப்படியெல்லாம்

பொய்யாய் வர்ணிக்கிறேன்

ஒவ்வோர் முறையும்!

ஆமாம்!

உன் பொய்க்கோபம்

எனக்குக்

கொள்ளை அழகுதானடி!


Monday, August 04, 2008

நட்பு


ஆளுக்கொரு திசையில்
ஆளுக்கொரு பணியில்
எவ்வளவோ தொலைவு
இணையத்தால் கூட
இணைக்கமுடிவதில்லை சில நேரம்!

இருந்தாலும்
இணைந்தே இருக்கிறோம்!
நினைவுகளால்
ஒருவரோடுவர்!

நினைக்கக் கூட
நேரமில்லையோ
என எண்ணுகிறேன்!
அப்பொழுதெல்லாம்
"அட மண்டு!
மறந்தால்தானே
நினைக்க வேண்டும்
என்கிறாய்!"

எவரும் அறியாவண்ணம்
எனக்குள்ளே
சிரித்துக் கொள்கிறேன்!
என்னைத்தான்
பைத்தியமாக்கி
வைத்திருக்கிறாயே!

உன் பேர்
சொல்ல ஆசைதானென்று
உரக்கப் பாடும்
நான்
உன் பேரை மட்டும்
மௌனமாய்
உச்சரித்து மகிழ்கிறேன்!
நான் உச்சரிக்கும்
கவிதை
உனக்கு மட்டும்
கேட்கம் என்று!


நீ
நான்
நாம்
தவிர
வெறொருவரில்லா
உலகைத்
தேடிக் கொண்டிருக்கிறேன்!
நண்பர்கள் தினப் பரிசாய்
நான் உனக்குத் தர!

நாமும்தான்
கொண்டாடுவோமே
நண்பர்கள் தினத்தை!
அவரவர் இடத்தில்
இருந்தபடியே!


இன்று
முதல் முதலாய்
உன் விரல் பிடித்து
முத்தமிடுகிறேன்
கேட்கிறதா உனக்கு
என்
முத்தத்தின் சத்தம்?