Tuesday, October 19, 2010

என்னையே கேட்கிறாய்..!


எனக்கான தோழி யரென்று

என்னையே கேட்கிறாய்?
தெரிந்து கேட்கிறாயா
தெரியாமல் கேட்கிறாயா
என்று தெரியாமல்
விழிக்கிறேன் நான்!

எவரும் இல்லை
என்று சொன்னாலும்
பொய் சொல்கிறேன்
என்கிறாய்!
எனக்குத் தெரியவில்லை!
நீயே சொல் என்கிறேன்!
காத்திருக்கச் சொல்கிறாய்!

உன் மீதான என் நேசத்தை
அறிந்தவளாய்த்தான் இருக்கிறாயா?
நான் சொல்லாத
என் தோழி
நீதானென்று
உன்னிடமே
எப்படிச் சொல்வது?