Monday, August 04, 2008

நட்பு


ஆளுக்கொரு திசையில்
ஆளுக்கொரு பணியில்
எவ்வளவோ தொலைவு
இணையத்தால் கூட
இணைக்கமுடிவதில்லை சில நேரம்!

இருந்தாலும்
இணைந்தே இருக்கிறோம்!
நினைவுகளால்
ஒருவரோடுவர்!

நினைக்கக் கூட
நேரமில்லையோ
என எண்ணுகிறேன்!
அப்பொழுதெல்லாம்
"அட மண்டு!
மறந்தால்தானே
நினைக்க வேண்டும்
என்கிறாய்!"

எவரும் அறியாவண்ணம்
எனக்குள்ளே
சிரித்துக் கொள்கிறேன்!
என்னைத்தான்
பைத்தியமாக்கி
வைத்திருக்கிறாயே!

உன் பேர்
சொல்ல ஆசைதானென்று
உரக்கப் பாடும்
நான்
உன் பேரை மட்டும்
மௌனமாய்
உச்சரித்து மகிழ்கிறேன்!
நான் உச்சரிக்கும்
கவிதை
உனக்கு மட்டும்
கேட்கம் என்று!


நீ
நான்
நாம்
தவிர
வெறொருவரில்லா
உலகைத்
தேடிக் கொண்டிருக்கிறேன்!
நண்பர்கள் தினப் பரிசாய்
நான் உனக்குத் தர!

நாமும்தான்
கொண்டாடுவோமே
நண்பர்கள் தினத்தை!
அவரவர் இடத்தில்
இருந்தபடியே!


இன்று
முதல் முதலாய்
உன் விரல் பிடித்து
முத்தமிடுகிறேன்
கேட்கிறதா உனக்கு
என்
முத்தத்தின் சத்தம்?

4 நட்புகளின் பதில்கள்:

said...
This comment has been removed by the author.
said...

நல்ல கவிதை! அழகா இருக்கு!

said...

அட...ரொம்ப அழகா எழுதி இருக்கீங்களே!

said...

நல்லா இருக்குங்க கவிதை...
நண்பர்கள் தின வாழ்த்துகள்...