Thursday, June 07, 2007

மீண்டும் மழலையாகிறேன்!




மீண்டும்
மழலையாகிறேன்!
அப்பொழுதேனும்
அள்ளியெடுத்துக்
கொஞ்ச
நீ
வருவாய் என்று!

மீண்டும்
மழையில் நனைகிறேன்!
காய்ச்சல் இருக்கிறதா
என்று நாளை
நீ
நெற்றி தொட்டுப்
பார்ப்பாய் அல்லவா?

மீண்டும்
தரையைப் பார்க்கிறேன்!
எனக்குள் ஏதோ
சலனமென்று
நீ
என் முகவாய் தொட்டு
தூக்கிப் பார்ப்பாய்!

மீண்டும்
உன்னைப் பிரிந்து செல்கிறேன்!
என் தவிப்பை உணர்ந்து
நீ
என்னைத் தேடி வருவாய்!

3 நட்புகளின் பதில்கள்:

said...

இத்தனை ஆசையை மனதில் புதைத்து
பாவனையாச் செய்தலை விடுத்து
நேரடியாய் என்னிடம் ஒருமுறை
காதலைச் சொல்லியிருந்தால்
என்றோ புரிந்திருக்குமே நண்பா!

சரி! போய் வா!
ம்ஹூம்! வராதே!
அடுத்த மாதம் எனக்குத் திருமணம்!

:))

said...

//சரி! போய் வா!
ம்ஹூம்! வராதே!
அடுத்த மாதம் எனக்குத் திருமணம்!
//

:)

வாருங்கள் வி.எஸ்.கே அவர்களே!

நல்ல பதில் கவிதை சொல்லி விட்டீர்கள்.

மிக்க நன்றி!

(நீங்கள் முருகனருள் பதிவில் இருக்கும் எஸ்.கே அவர்கள்தானே?)

said...

:):)