Tuesday, February 13, 2007

பரிசு!


காதலர் தினப்பரிசாய்
இக் கவிதையைத்
தருகிறேன் என்றேன்!
ஏற்றுக் கொண்டாய்
என் தோழியாய்!

தோள் கொடுத்தால்
சாய்ந்து கொள்கிறாய்!
கை கொடுத்தால்
பிடித்துக் கொள்கிறாய்!

எல்லா நேரங்களிலும்
சமர்த்தாகவே இருக்கிறாய்!

அடம் பிடிப்பது
எப்போதுமே
நானாக இருக்கவேண்டுமென
விரும்புகிறாய்!
அப்போதெல்லாம்
அன்பாக
சமாதானப் படுத்துகிறாய்!

நீ திட்டினாலும்
செல்லமாய்க்
குட்டுவதாகவே
எனக்குத் தோன்றுகிறது!

காதலா? நட்பா?
என்ற கலந்தாய்வு
நடந்து கொண்டிருக்கிறது
என்னுள் - முடிவின்றி !
அதையும் நீ
அமைதியாக
ரசித்துக் கொள்கிறாய்!

உன் முந்தானைச்
சிறகோடு முகம் வைத்துத்
தூங்க விரும்புகிறேன்!
அதற்கும் அனுமதிக்கிறாய்!

என் விருப்பம்
மட்டுமே
உன் விருப்பம்
என்று
நான் சொல்லும்
அனைத்திற்கும்
செவி சாய்க்கிறாய்!

அன்பென்ற ஒன்றின்
ஆத்மார்த்தமான தேடலில்
முப்பதாண்டு முடிவில்
நீயெனக்கு கிடைத்திருக்கிறாய்!

இன்றுதான் காதலர் தினமாமே!
என்ன பரிசு தருவது உனக்கு?
என்னைத் தவிர?


6 நட்புகளின் பதில்கள்:

said...

நீங்களுமா???~!!!!
ஆனால் வரிகள் அருமை...வாழ்த்துக்கள் :)

said...

//நீங்களுமா???~!!!!//

புரிய வில்லையே?


//ஆனால் வரிகள் அருமை...வாழ்த்துக்கள் //

மிக்க நன்றி தூயா!

said...

தெளிந்த நீரோடை போல் அழகாக நகர்கிறது கவிதை.

நன்றாக உள்ளது.

said...

//தெளிந்த நீரோடை போல் அழகாக நகர்கிறது கவிதை.

நன்றாக உள்ளது.
//

மிக்க நன்றி கோவை மணி!

said...

ரொம்ப அருமையா இருக்கு அண்ணா... ஆனா நட்பா காதலான்றதுதான் புரியாலை :)))

said...

அருமை. ரசித்தேன்...

வாழ்த்துகள்..