Sunday, August 06, 2006

உறவு!

எல்லோரும் இருந்தும்
ஏதோ நான்
தனியே இருக்கிறேன்.

என் உள்ளத்தில்
இப்போது
வெற்றிடம்
நிரம்பி வழிகிறது!

என் தேடல்
ஒரு தவமாயிருக்கிறது!
வரம் என்று
கிடைக்கும்?

பொல்லா வினையா?
பாவத்தின் பலனா?
விதியின் சதியா?
என்னவென்று
தெரியவில்லை!

எனக்கே
எனக்கென்று
எப்போது
வருவாய் நீ?
என் தோளில்
சாய்ந்து கொள்ள..!

10 நட்புகளின் பதில்கள்:

said...

சாமி, ஏனுங்க இப்படி அநியாயத்துக்கு பீல் பண்ணிகிட்டு இருக்கீங்க
இது தேன் கூடு போட்டிக்கா,
அப்படி என்றால் அனுப்பி வைக்கவும்

said...

ரொம்ப பீல் பண்ணுகீன்றீர்கள் என்று போன பின்னூட்டத்தில் சொன்னேன். அப்ப அப்ப இளைப்பாற சங்கத்து பக்கம் வாங்க

said...

///
எனக்கே
எனக்கென்று
எப்போது
வருவாய் நீ?
என் தோளில்
சாய்ந்து கொள்ள..!
///

நல்லா இருக்குங்க இந்த வரிகள்.

said...

//எனக்கே
எனக்கென்று
எப்போது
வருவாய் நீ?
என் தோளில்
சாய்ந்து கொள்ள..!// கண்டிப்பா சீக்கிரம் வந்துடுவார் கவலை வேண்டாம் ;-)

said...

வரம் கிடைக்க வேண்டிய நேரத்தில் தானாகக் கிடைக்கும்.

said...

எல்லோரும் இருந்தும்
ஏதோ நான்
தனியே இருக்கிறேன்.

என் உள்ளத்தில்
இப்போது
வெற்றிடம்
நிரம்பி வழிகிறது!


நல்லா இருக்குங்க

said...

//ரொம்ப பீல் பண்ணுகீன்றீர்கள் என்று போன பின்னூட்டத்தில் சொன்னேன். அப்ப அப்ப இளைப்பாற சங்கத்து பக்கம் வாங்க
//

சங்கத்துப் பக்கம் தினமும் வரதுதான் நாகை சிவா!

ஆனா பின்னூட்டம் போடுறதில்லை!

said...

@நல்லா இருக்குங்க இந்த வரிகள்.


மிக்க நன்றி செந்தில் குமரன்

said...

@கண்டிப்பா சீக்கிரம் வந்துடுவார் கவலை வேண்டாம் ;-)


:)

மிக்க நன்றி ஜெஸிலா அவர்களே!

said...

@நல்லா இருக்குங்க

மிக்க நன்று யாழ் அகத்தியன்!