Sunday, February 12, 2006

மௌனம் ஏன்?

சந்தித்தும் பேசாத
மௌனம் ஏன் தோழி?

மௌனம் ஓர்
முள் படுக்கை
என்று தெரியுமா
உனக்கு?

என்ன தவறு
செய்தேனென்று
இத்தகைய தண்டனை?

மௌனத்தைக்
கலைத்து
ஓர்
வார்த்தை சொல்
போதும் எனக்கு!
"இறந்து விடு" என்று!

4 நட்புகளின் பதில்கள்:

said...

//இறந்துவிடு என்று// ?!

//தூய்மையானது, ஆழமானது, எதிப்புகளற்றது, எதிபார்ப்புகளற்றது!// இத்தனையையும் அனுபவிக்க உயிரோட இருக்கவேணாமா ஜெகன்?!

நம்மூர்ல மழைங்ங்லா? :)

said...

வருகைக்கு நன்றி இளவஞ்சி!

//இத்தனையையும் அனுபவிக்க உயிரோட இருக்கவேணாமா ஜெகன்?!
//

இருக்கணும்தான், அப்போதைய உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கேன் அவ்வளவுதான்.

மழையெல்லாம் ஒண்ணும் இல்லீங்களே!

said...

காதலர் மாத ஸ்பெசலா,

கலக்குங்கப்பா, கலக்குங்க.

இன்னும் கொஞ்சம் மெருகு ஏற்றியிருக்கலாம்.

said...

வருகைக்கும் விமர்சனத்துக்கும் நன்றி மஞ்சூர் ராசா!