Saturday, July 22, 2006

காத்திருக்கிறேன்....!


விழிகள் வாசலில்
உன்னை எதிர்பார்த்து!
விழிகளின் வாசலில்
கண்ணீர் தயாராகும்!

காரணமே இல்லாது
கலங்குகிறது உள்ளம்!
இதயம் படபடக்க
உன் வருகையைப்
பார்த்திருப்பேன்!

காத்திருக்கிறேன்
ஒவ்வொரு முறையும்!
கடந்து செல்கிறாய்
ஒவ்வொரு முறையும்!

கவனித்து சென்றாயா?
தெரிவதில்லை எனக்கு!

குறிஞ்சி மலராய்
எப்போதேனும் நீ
உதிர்க்கும்
புன்னகையும்
எனக்கென்றே
நினைத்து
காத்திருத்தலைத்
தொடர்கிறேன்....!

3 நட்புகளின் பதில்கள்:

said...

காத்திருப்பு வெற்றி பெறட்டும்! :)

said...

பொன்ஸ்,

முதல் முறையா நம்ம வலைப்பூ பக்கமும் வந்திருக்கிறீர்கள்.


நன்றி.

(அட யானை என்னங்க நிக்காம ஓடுது?)

வாழ்த்திற்கு நன்றி அருட்பெருங்கோ அவர்களே!

said...

காத்து இருந்து காத்து இருந்து காலங்கள் போகுதடி என்ற ராக தேவனின் பாடல் தான் நினைவுக்கு வருகின்றது. உங்க கவிதை படித்தவுடன்.
:)
நல்லா இருக்கு.