Friday, February 12, 2010

உனக்கான என் கவிதை...!



இதோ!
உனக்கான
என் கவிதை!
உனக்கு மட்டுமே
புரியக் கூடும்!
என் இதயத்தின்
வரிகளை
ஒன்று விடாமல்
படித்தவள்
நீ மட்டுமே!

வரிகளை வாசிக்கும்போது
சில வலிகளையும் உணர்ந்து
வருடியவளும் நீயேதான்!

மூங்கில் காடுகளின்
மத்தியில்
என் கனவுகளில்
என் கைகோர்த்து நடக்கையில்கூட
நினைத்துப் பார்த்திருக்கிறேன்!
எப்பொழுதேனும் நிரந்தரமாய்
என்னுடன் வந்தாலென்னவென்று
நீ யோசித்திருக்கிறாயோ என்று!

கடற்கரைச் சாலை
கல்லூரி வாசல்
ஐஸ்கிரீம் பார்லர்
என்று
நீ உடனிருந்த
அனைத்து இடங்களுமே
என்னை மறந்திருந்த
சொர்க்க பூமிகளாகவே
இருந்திருக்கின்றன!

விடிந்தும் விடியாத
அதிகாலைப் பொழுதுகளில்
உன் மெல்லிய விரல்களின்
ஸ்பரிஸத்துடன்
கதகதப்பான உன்
இதழ்கள் சொல்லும்
காலை வணக்கத்தை
வேண்டியே
பொய்யுறக்கம் கொண்டு
கண் மூடிக் கிடக்கிறேன் நான்!

தேவதைகளுக்கும்
மனிதர்களுக்கும்
ஏனோ
ஏழாம்பொருத்தமாகவே
இருந்து வருகிறது!
எப்பொழுதும் சேர்ந்தே
இருக்க முடிவதில்லை!

விதிகளை
உடைப்போம்!
மரபுகளை
மறுப்போம்!
இனியேனும்
சேர்ந்திருக்கக் கூடுமா
என்று ஆராய்வோம் வா
என் அழகு தேவதையே!
அங்கே
காதலர் தினம்
நமக்காகக்
காத்திருக்கிறது!

3 நட்புகளின் பதில்கள்:

said...

ஆராய்ங்கப்பா

said...

ஆக்கம் அற்புதம்...உங்கள் தேவதைக்காக நீங்கள் வரைந்த கவிதை மிக நேர்த்தி,,,,

said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in